மழையினால் வலுவிழந்த சுவர்.. சிறுமிக்கு அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


போகலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள போகலூர் பகுதியை சார்ந்தவர் பவித்ரா (வயது 17).

இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில், சிறுமியின் தாத்தா, பாட்டி வீடு மண்சுவர் கொண்ட கூரை வீடு ஆகும். 

சம்பவத்தன்று சிறுமி தனது பாட்டியின் வீட்டில் இருந்த நிலையில், மழையினால் பலமிழந்து காணப்பட்ட சுவர் சரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த சிறுமி சுவற்றின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பவித்ரா மற்றும் அவரது தாத்தா, பாட்டியை மீட்ட நிலையில், சிறுமியின் பாட்டி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பவித்ராவின் தாத்தா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள பிற மண்வீடுகளும் எப்படி உள்ளது என்று சோதனை செய்துகொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore child girl died wall collapse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->