வேலூர்: கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி - அதிர்ச்சிக்குள்ளாக்கும் பரபரப்பு சம்பவம்..! - Seithipunal
Seithipunal


நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள அகரம் புதுமனையை சேர்ந்தவர் சூரிமுத்து, இவருக்கு வயது 70. இவர் முதல் மனைவி இறந்துவிட்டதால் நிர்மலா என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நிர்மலாவின் நடத்தையில் சூரிமுத்துவிற்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதனைப்போல நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சூரி முத்துவின் உணவில் விஷம் கலந்துள்ளார். சூரிமுத்து உணவை எடுத்துகொண்டு தனது விவசாய நிலத்திற்க்கு சென்றுள்ளார். அங்கு அவரும் அவருடைய உறவினர் காந்தராஜ் ஆகியோர் அந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒருவர் உணவில் விஷ வாடை அடிப்பதாக கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களிள் உடல் நிலை கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைகாக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். இதில் சூரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நிர்மலாவிடம் நடத்திய விசாரணையில் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு உணவில் விஷம் கலந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் நிர்மலாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Anaikattu Woman Murder his Husband gives Poison Food


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->