இந்த அருள்வாக்கு பொண்ணு நியாபகம் இருக்கா மக்களே.. போன வருடம் சொன்னது., என்ன செய்ய..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்திய அளவிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அன்றாடம் தொழில் செய்து பிழைத்து வந்த தொழிலாளர்கள் முதல் பெருநிறுவனங்களை வைத்து நடத்தி வந்த முதலாளிகள் வரை திக்குமுக்காடி போயினர். மேலும், உயிரிழப்புகளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. 

தற்போது, 2021 மே மாதம் நடைமுறையில் இருக்கும் நிலையில், கடந்த வருட கொரோனா பரவலை விட தற்போது அதிதீவிர காண்பித்துள்ள கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலால் பல்வேறு மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவும், சோகமாகவும் இருக்கிறது. ஆனால், சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என மாநிலங்களின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், இறப்பு எண்ணிக்கை மற்றும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பல்வேறு இந்திய மாநிலங்களில் வேறு வழியின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது நடைமுறையில் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் தீவிரமெடுத்துள்ள நிலையில், மூன்றாவது கொரோனா அலை பரவல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. 

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் அருள் வந்து சாலையில் ஆவேசமாக நடந்து சென்ற பெண்மணி கொரோனா வைரஸ் மக்களை திருத்த அனுப்பப்பட்டது என்றும், அதற்கான தடுப்பூசிகள் கிடைக்க சில வருடங்கள் ஆகும் என்றும், மக்கள் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பரபரப்பாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அந்த சமயத்தில் பெரும் வைரலாகியது.

இந்த வீடியோவில் அருள்வந்து பேசிய பெண்மணி, " எதற்ச்சையாக பார்த்து வீடியோ எடுத்த பத்திரிகையாளரை பார்த்து உனது தொழிலுக்காக நீ செய்கிறாய். கலியுகத்திற்கான தொடக்கமே இது. கலியுகத்தின் அழிவிற்கான ஆரம்பமே இது. 7 மாதத்திற்கு பின்னர் மட்டுமே இதற்கான மருந்து வரும். இந்த கொரோனா நோய் என்பது ஒழியாது. இந்த உலகத்தில் பாவிகள் அதிகரித்துவிட்டார்கள். பொய், திருட்டு, கற்பழிப்பு, கொலை போன்றவை அதிகரித்துவிட்டது. 

மனிதர்கள் தெய்வங்களின் சினத்தை சீண்டிவிட்டார்கள். மேற்கு திசையில் இருக்கும் கிராமத்திலும் கொரோனா நோய் பரவும். மக்கள் அல்லல் பட வேண்டும். சிந்தனையில், உங்கள் செயலில் மனம் வருந்தி திருந்த வேண்டும் " என்று தெரிவித்து இருந்தார். இவர் பேசிய வீடியோ காட்சிகள் வைரலான பின்னர் தடுப்பூசி வந்ததும் கொரோனா விடுதலை அளிக்கும் என பலரும் நம்பியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் பரவல், இன்னும் சில மாதத்தில் அல்லது வருடத்தில் மூன்றாம் பரவல் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

ஆகவே தனித்திரு, விழித்திரு, விலகியிரு, விழிப்போடு இரு... 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Ambur Girl Talks about Corona Could not gone world 27 April 2021 footage 7 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->