10ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர்..தர்மஅடி கொடுத்த உறவினர்கள்.!
Vellavedu youth men try rap school girl
திருவள்ளூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு (16) மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்ற இளைஞர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சதீஷ்குமார் பள்ளி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர அந்த வாலிபரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் மாணவியை வலுக்கட்டாயமாக கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் மாணவி பயந்து கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கற்பழிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து வீட்டில் அடைத்து வைத்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கீரை சிறையில் அடைத்துள்ளனர்.
அதன்பிறகு, சிறுமியின் உறவினர்கள் சதீஷ்குமாரின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதீஷ்குமாரின் உறவினர் காயமடைந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய மாணவியின் உறவினர்கள் 11 பேர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
English Summary
Vellavedu youth men try rap school girl