வளரிவீரரின் 400 ஆண்டு பழமையான நடுக்கல்., மதுரையில் கண்டுபிடிப்பு..!!
Veeran Nadukal With Valari Weapon found near Usilampatti
வளரி ஆயுதத்துடன் வீரன் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் , இ.கோட்டைப்பட்டி கிரமத்தின் அருகே உள்ளமேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நடுக்கல் உள்ளதாக தொல்லியல் துறைக்கு அந்த பகுதி மக்கள் தகவலறித்தனர்.
இந்த தகவலை தொடர்ந்து அங்கு வந்த தொல்லியல் துறையினர் அந்த ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 3 அடி உயரமும் 3 அகலமும் கொண்ட சிற்பத்தில் வீரன் ஒருவன் தனது மனைவியுடன் வளரியை பிடித்து கொண்டு நிற்பது போன்ற காட்சி வடிக்கப்படிருந்தது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் வளரி கிடைத்த நிலையில் தற்போது உசிலம்பட்டியிலும் வளரி ஆயுதம் பயன்படுத்தியதற்கான சான்றுகாக இந்த நடுக்கல் உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
English Summary
Veeran Nadukal With Valari Weapon found near Usilampatti