ஆடி காத்து! கடல் போல் அலை! மக்களின் மதி மயக்கும் வீராணம் ஏரிக்கரை! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. 

இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. கா்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு சுமார் 60,000 கனஅடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. 

கா்நாடக அணைகளின் உபரிநீா் கடந்த வாரம் முதல் மேட்டூா் அணைக்கு வரத்தொடங்கியது. இதன் தமிழகத்தில் காரணமாக பாசனத்துக்கு தாராளமாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை இன்று எட்டியுள்ளது.

நிரம்பி வழியும் வீராணம் ஏரியில் கடல் அலை போல் எழும்புவதால், இந்த காட்சியை ஏரிக்கரை ஓரமாக ஆடி காத்துடன் வாகன ஓட்டிகள் சற்று நின்று ரசித்து செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veeraanam lake now


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->