விசிக ஒரு லெட்டர் பேட் கட்சி! திருமாவளவன் ஜார்கண்ட் போய் ஆர்எஸ்எஸ் வேலை பார்க்கட்டும்! - Seithipunal
Seithipunal


70 ஆண்டு காலமாக மக்களை முட்டாளாக்கி வைத்துள்ளனர்!

கரூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நூறு காச நோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்த அண்ணாமலை பின்னர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் வழக்கு கொடுத்துள்ளார் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பற்றி ஜவஹர்லால் நேரு ஒரு சில விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதை பற்றி இங்கு விரிவாக கூற கடமைப்பட்டுள்ளேன். இந்திய சீன போரின் முடிவில் டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை அழைத்தார்.

இந்திய சீன போரின் பொழுது உங்கள் இயக்கம் வேலை மற்றும் உதவி செய்தீர்கள். அதன் காரணமாக இந்த வெற்றி கொண்டாட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஜவஹர்லால் நேரு அழைத்தாரா இல்லையா என்று காங்கிரஸ் கட்சியினரே பதில் சொல்லட்டும். 

இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் கட்சி கிளையை ஆரம்பித்து கொடியேற்றி நான்கு தொண்டரை வைத்துக்கொண்டு லெட்டர் பேடில் கட்சி நடத்தும் இவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்க்கிறார்.

 ஒரு ஆண்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரம் மட்டும் உங்கள் கட்சியின் தொண்டன் எண்ணிக்கை விட ஆயிரம் மடங்கு அதிகம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இதை நான் ஆர்எஸ்எஸ் பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கலாச்சாரத்தை முன்னெடுத்து கொண்டு போய் கொண்டு இருக்கின்றனர். ஒரு குக்கிராமத்தில் நாலு பேரை கூட்டி துண்டு போட்டுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து கொடி ஏற்றும் இவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பற்றி பேசுகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கம். இவர்கள் ஆர்எஸ்எஸ் என்றால் லெட்டர் பேரில் இரண்டு பேர் கையெழுத்து போடும் இயக்கம் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆர்எஸ்எஸ் பற்றி தெரிய வேண்டும் என்றால் ஜம்மு காஷ்மீரையும் வடகிழக்கு மாநிலங்களையும் சென்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு எதுவும் தெரியாது, கும்முடிபூண்டியை தாண்டாத இவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு வேண்டுமென்றால் ரயில் பயண சீட்டை நான் எடுத்து தருகிறேன். ஆர்எஸ்எஸ் பணியை வடகிழக்கு மாநிலங்களில் சென்று பார்க்க வேண்டும் ஆர்எஸ்எஸ் பணியை ஜம்மு & காஷ்மீர் சென்று பார்க்க வேண்டும். மக்களுக்காக அரசு சென்று வேலை செய்ய முடியாத இடங்களில் கூட ஆர்எஸ்எஸ் என்ற வேலை செய்துள்ளது. 

திருமாவளவனுக்கு நான் சவால் விடுகிறேன். நானே என் செலவில் ரயில் பயணச்சீட்டை எடுத்து தருகிறேன். திருமாவளவன் ஜார்க்கண்ட் சென்று ஆர்எஸ்எஸ் வேலையை பார்க்கட்டும். அவருடைய தொண்டர்கள் ஜம்மு காஷ்மீர் சென்று ஆர்எஸ்எஸ் வேலையை பார்க்கட்டும். கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தவர்களுக்கு பயணிச்சிட்டு எடுத்து அவர்களின் மாநிலமான மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா அனுப்புகிறேன். கம்யூனிஸ்ட் கட்சியை விட ஆர்எஸ்எஸ் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறது என்று அவர்கள் பார்க்கட்டும்.

ஆர்எஸ்எஸ் பற்றி தெரியாமல் இங்கு உள்ள லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பற்றி பேசுகிறது. வேலையில்லாத இருவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஆர்எஸ்எஸ் என்பது ஒரு பூதம் என்பது போல் மாயை உருவாக்குகின்றனர்.

அக்டோபர் 2ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்எஸ்எஸ் பேரணி ஒற்றுமைக்காக அவர்கள் நடத்துகிறார்கள். காவல்துறை அனுமதி தருகிறது, உயர் நீதிமன்றம் அனுமதி தருகிறது அதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் இவர்களுக்கு என்ன அரசியல் லாபம். கண்ணை கட்டிக்கொண்டு யானையின் தும்பிக்கையை பிடித்து இதுதான் பாம்பு என்று சொல்வது போல ஆர்எஸ்எஸ் பற்றி பேசுகிறார்கள். 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ராஷ்டிரிய முஸ்லிம் மஞ்ச் என்ற ஒரு இயக்கம் உள்ளது. அதை திருமாவளவனுக்கு சொல்லுங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இஸ்லாமியர்கள் உள்ளார்கள் என்று நீங்கள் தான் அவரிடம் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அந்த அமைப்பு உள்ளது இஸ்லாமியர்கள் உள்ளனர். ஒற்றுமையுடன் ஒருமைப்பாட்டுக்காக இஸ்லாமியர்களும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளனர் என்று பத்திரிகையாளர் நீங்கள் தான் சொல்ல வேண்டும். 

எதுவும் தெரியாத பள்ளிக்கூட பையனைப் போல் பேசுகிறார். இந்த இயக்கத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் 70 ஆண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் இணைத்தது ஆர்எஸ்எஸ் தான் அரசாங்கம் கூட கிடையாது.நூறு ஆண்டுகளைக் கடந்த ஒரு இயக்கத்தைப் பற்றி லெட்டர் பேட் கட்சிகள் நீங்கள் பேசலாமா என பத்திரிக்கைகள் நீங்கதான் கேட்டு சொல்ல வேண்டும்" என பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK is a letter pad party Let Mr. Jharkhand go and do RSS work


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->