விசிக தேர்தல் விருப்ப மனுக்கள் பெறுதல் - அறிவிப்பு வெளியீடு.!
VCK Announce Election Option Petition 2021 Election
விசிக தேர்தல் விருப்ப மனுக்கள் பெறுதல் தொடர்பாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்த அறிக்கையில், " எதிர்வரும் ஏப்ரல் 06 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் நமது கட்சி திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது யாவரும் அறிந்ததேயாகும். அத்தொகுதிகள் எவை எவையென திமுக தரப்பு குழுவினரோடு கலந்துபேசி இன்னும் ஓரிரு நாள்களில் இறுதிசெய்து அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் மார்ச்-12 முதல் தொடங்கவுள்ளதை அறிவோம். இந்நிலையில், மார்ச்12-ஆம் தேதிக்குள்ளாக விருப்ப மனு செய்வோரை நேர்காணல் செய்து வேட்பாளர்களைத் தேர்வு செய்தாக வேண்டும்.
எனவே, நாளை 06-03-2021 சனிக்கிழமை முதல் 08-03-2021 வரை விருப்பமனுக்கள் கட்சியின் தலைமையகத்தில் பெறப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களிலும் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
தேர்தல்பணிக்குழுவின் மாநில செயலாளர் ஜெ.குணவழகன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, தேர்தல்பணிக்குழு மாநில துணை செயலாளர்கள் மு.தனக்கோடி, வழக்கறிஞர் இரா.தமிழினியன் மற்றும் இணை செய்தித் தொடர்பாளர் இரா.விக்கிரமன் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெறுகின்றனர்.
விருப்ப மனு கட்டணமாக ரூ.2000,( இரண்டாயிரம் மட்டும்) பணமாகச் செலுத்த வேண்டும். விருப்ப மனு படிவத்தை விசிக தலைமையகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மூன்று 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படம் விருப்பமனுவுடன் இணைக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
VCK Announce Election Option Petition 2021 Election