திமுகவில் காங்கிரசுக்கு எத்தனை இடம்?! அதிரடியாக அறிவித்த செயல் தலைவர்!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் வசந்தகுமார் எம்எல்ஏ இன்று திருநெல்வேலி வந்தார். அவர், "செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் அழகிரி உள்ளிட்ட அனைவரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்க்க முயற்சித்து வருகிறோம்.

வரும் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடம் என்பது குறித்து ராகுல்காந்தி முடிவு செய்வார்.

நாங்கள் 16 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம். இதற்கு கூடுதலாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம். ஆனால், போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது ஒன்றே எங்களது இலக்கு.

குறிப்பாக நெல்லை, குமரி, கோவை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளை பெற்றேன்.

இந்த முறை நெல்லை அல்லது குமரியில் போட்டியிட விருப்பம் உள்ளது. எங்களை பொறுத்தவரை ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதே குறிக்கோள்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vasandhakumar says about coalition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->