#சற்றுமுன் || தனியார் பள்ளிவேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து.! 9 மாணவர்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தனியார் பள்ளி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கிராம பகுதியில், தனியார் பள்ளியை சேர்ந்த வேன் ஒன்று சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 9 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வெளியான தகவலின்படி, இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அந்த தனியார் வேன், நிலை தடுமாறி தலைகுப்புற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த தனியார் பேருந்தின் ஓட்டுநரும், வேனில் பயணம் செய்த ஒன்பது மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயம் அடைந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணம் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanthavasi school van accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->