இட ஒதுக்கீடு தியாகியின் தாயார் மறைவு! பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி!
Vanniyar Sanka state Secretary mourning to Reservation Martyr's mother dies
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி உலகமே திரும்பி பார்க்கின்ற வகையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற, தொடர் சாலை மறியல் போராட்ட துப்பாக்கிச் சூட்டில் இட ஒதுக்கீட்டுக்காக தன் இன்னுயிரை ஈன்ற தியாகி, கோலியனூர் கோவிந்தன் அவர்களின் வீரத்தாயார் சின்னபொன்னு அம்மாள் அவர்கள் முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்
அம்மையாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. சார்பு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மையாருக்கு மரியாதை செலுத்துவார்கள் என அறிவித்து இருந்தார்.
அதன்படி, அம்மையாரது சொந்த ஊரான கோலியனூர் கிராம இல்லத்தில் உள்ள அவரது பூத உடலுக்கு வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி தியாகியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வன்னியர் சங்க மாநில செயலாருடன், விழுப்புரம் மாவட்ட பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்க.ஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநில துணைத் தலைவர் க.செந்தில்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினரும் அம்மையாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
English Summary
Vanniyar Sanka state Secretary mourning to Reservation Martyr's mother dies