மணற்கொள்ளையால் அரங்கேறிய கொடூரம்... பச்சிளம் குழந்தைகள் பலியான பரிதாபம்.!!
Vaniyambadi child died
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தகரக்குப்பம் பகுதியை சார்ந்த சிறுமிகள் ரேகா (வயது 9), ஜனனி (வயது 6). இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள குட்டை பகுதிக்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமிகள் இருவரும் விளையாட்டுதனமாக நீர் உள்ள பகுதிக்கு செல்லவே, நீரில் எதிர்பாராத விதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விளையாட சென்ற குழந்தைகளை காணாது பதறிப்போன பெற்றோர்கள், சிறுமிகளை தேடியதில் இருவரும் பிணமாக மிதந்துள்ளனர்.
இதனை அறிந்த காவல் துறையினர், சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் அதிகளவு மணற்கொள்ளை நடைபெற்று வருவதாகவும், இதனால் ஏற்பட்ட பள்ளத்தின் நீரில் சிக்கி சிறுமிகள் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil