இந்த மாதிரி ஆட்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோவின் ஆவேச பேச்சு..!
vaiko speech about women harassment
நீண்ட காலமாகவே பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து, பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி இருக்கிறார்.
மாநிலங்களவையில் பேசிய வைகோ, நாட்டில் பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள் என்றார். தாயை தெய்வம் என்று பேணிக் காப்பது நம் கலாசாரம் என்ற அவர், தினம் தினம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது என்று கூறினார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் தினசரி தொடர்ந்து நடப்பதாகவும், பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் பெற்றோர், அந்த பிள்ளை குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டுக்கு வரவில்லை என்றால் பதற்றமடைகிறார்கள் என்றும் பேசினார். அவர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற வைகோ, இது போன்ற சம்பங்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கட வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.
English Summary
vaiko speech about women harassment