18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும்., திமுக வெற்றி உறுதி.!! சூளுரைத்து வைகோ!!
Vaiko says about dmk
நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், செல்வராஜை ஆதரித்து, இன்று வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் "18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும், வெற்றி பெற்று அதிமுகவின் ஆட்சியை கலைத்து திமுக ஆட்சி மலர போகிறது.
திமுக சுட்டிக் காட்டிய அனைத்து அம்சங்களையும், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு,72000 ரூபாய் ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
இது சாத்தியமற்றது என பலரும் கூறுகின்றனர். ஆனால், இத்திட்டம் சாத்தியமாகக் கூடும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசை எதிர்க்க மாநில அரசு திராணியற்றுள்ளது. அது முதுகெலும்பில்லாத அரசு.
ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்களித்திருக்கின்றனர். மேலும், ல்டா மாவட்டங்களில் 50 வருடங்களாக வேளாண் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கும்" என அவர் கூறியுள்ளார்.