தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் சென்னையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வராததே தடுப்பூசி தட்டுப்பாடு நிலவ காரணம். குறிப்பாக தமிழகத்தில் மொத்தமாக ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில், பல லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் கையிருப்பில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே செலுத்த முடியும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே தற்போது குறைந்த அளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaccination stop in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->