ஸ்ரீ ராமனின் புண்ணிய பூமியில்., - கோவையில் உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்..!
Uttar Pradesh CM Yogi Adityanath Speech at Coimbatore TN Election 2021
பகவான் ஸ்ரீ ராமனின் புண்ணிய பூமியில் இருந்து கொங்கு பகுதிக்கு வந்துள்ளேன் என உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து, உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " கோவை மக்களுக்கு அன்பான வணக்கம்.
கோவை மண்ணில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அன்பு சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இங்கு வந்துள்ள பாஜக நிர்வாகிகள், அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பிற கூட்டணிக்கட்சி தொண்டர்களுக்கும் வணக்கம்.
நான் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து வருகிறேன். உத்திர பிரதேசம் மாநிலம் பகவான் ஸ்ரீ ராமனின் புண்ணிய பூமி. நமது புண்ணிய பூமியில் இருந்து கொங்கு பகுதிக்கு வந்துள்ளேன். கொங்கு பகுதிகளில் டெக்ஸ்டைல் நகரத்தை உருவாக்கியுள்ளார்கள். கல்வித்தரத்தை உயர்த்த பலரும் பாடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Uttar Pradesh CM Yogi Adityanath Speech at Coimbatore TN Election 2021