வயதான காவலாளியை தகாத வார்த்தையால் திட்டி சரமாரியாக தாக்கிய மர்ம நபர்..!
unknown person attack the aged watchman
தமிழகத்தில் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வயதான காவலாளி ஒருவரை காரில் வந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்கி தள்ளிவிடும் சிசிடிவி காட்சி வெளியாகிருகிறது.
சாமிநாதபுரத்தில் பிரண்ட்ஸ் கார்மெண்ட்ஸ் என்ற ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் 69 வயதான தானப்பன் என்பவர் காவலாளியாக பணிபுரிகிறார்.
இந்த நிறுவனத்தின் முன்னே வந்து நின்ற காரை ஓரமாக நிறுத்துமாறு கூறியதால், காரில் இருந்து இறங்கிய நபர் காவலாளியை ஆபாசமாக திட்டி, சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி யில் பதிவாகி உள்ளது. இதில் தானப்பன் படுகாயமடைந்ததால், தாக்கிய நபரை சிசிடிவி பதிவை வைத்து பள்ளப்பட்டி போலீசார் தேடிவருகின்றனர்.
English Summary
unknown person attack the aged watchman