பெண்ணை ஏமாற்றிய விஏஓ.?! உளுந்தூர்பேட்டை அருகே கணவர் வீட்டு முன் பெண் தர்ணா.! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த ராம் குமார் என்பவர் நன்னாவரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார். அந்தப் பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரி என்ற பெண்ணை ராம்குமார் காதலித்து திருமணம் செய்துள்ளார். ராம்குமாரின் பெற்றோர் அவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிரச்சனை செய்து வந்தனர்.

பின்னர் ராம்குமார் தனது பெற்றோர் சம்மதிக்கும் வரை உன்னுடைய பெற்றோர் வீட்டில் இரு என்று மனைவியை அனுப்பி வைத்துள்ளார். ஈஸ்வரியும் அதன்படி தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். மூன்று மாதம் ஆகியும் கணவர் தன்னை அழைக்காத காரணத்தால் ராம்குமார் வீட்டிற்கு சென்று ஈஸ்வரி கேட்டபோது கணவரை காட்டாமல் அவர்களுடைய பெற்றோர் அந்தப் பெண்ணை திட்டி வெளியே அனுப்பியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி அவர்கள் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். பின்னர் இதுகுறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் வந்து ஈஸ்வரியை சமாதானம் செய்ய தொடங்கினர். இதுகுறித்து ராம்குமாரின் பெற்றோரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஈஸ்வரி போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ulunthurpet husband wife issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->