#தமிழகம் || கழுத்தறுந்த நிலையில் இறந்து கிடந்த பள்ளி மாணவி - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உடுமலை அருகே பள்ளி மாணவி, ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நேற்று கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டிற்குள் இறந்து கிடந்துள்ளார்.

வேலைக்கு சென்றிருந்த பெற்றோர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது மகள் இறந்து கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் என்றும், மாணவிக்கு வேறு ஏதும் நிகழ்ந்து உள்ளதா என்பது குறித்த விவரங்களும் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு இறந்த சம்பவம், அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஒருவித பதற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udumalai school girl murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->