ரஜினியின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த உதயநிதி... இப்படியே பேசிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்..!
udhayanidhi stalin replies to rajinikanth
நடிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.
அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாததை ஒன்றும் நான் சொல்லவில்லை. 1971 ம் ஆண்டு ராமர் சீதை சிலை உடையில்லாமல் கொண்டுவரப்பட்டது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை, மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ரஜினி தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். ஏற்கனவே காவிரி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு, பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் எது உண்மை என்பது குறித்த உண்மையான ஆவணங்கள் சமர்பிக்காமல், யாருக்கும் தீர்வு கிடைக்காது, இப்படியே மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பலர் புலம்பி வருகிறார்கள். இப்படியே பேசிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் எது உண்மையும் சீக்கிரம் சொல்லுங்கனு அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்... எங்கு மூல பத்திரம் விவகாரம் போல இதுவும் இப்படியே போய்விடுமோ? என்று ஒரு பக்கம் யோசிக்க தோணுகிறது.
English Summary
udhayanidhi stalin replies to rajinikanth