கைது செய்யப்பட்ட உதயநிதி ரிலீஸ்... ஸ்தம்பித்துப்போன நாகை..!
Udhayanidhi Stalin Released Nagapattinam 20 November 2020
திமுக இளைஞரணி தலைவர் கைதுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக தீவிர களப்பணி மற்றும் இணைய விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறது.
திமுகவின் இளைஞரணி தலைவர் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், 100 நாள் பிரச்சார பயணம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் அறிவித்தது. மேலும், தனது முதல் பரப்புரையை நாகையில் உள்ள திருகுவளையில் இருந்து துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருகுவளையில் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தை துவங்கியபோது, காவல் துறையினரால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுடன் கைதாகி இருந்த திமுகவினர் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதாகிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, அவர் காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்ததேர்தல் பிரச்சாரம் காரணமாக நாகப்பட்டினமே ஸ்தம்பித்துபோனது.
Tamil online news Today News in Tamil
English Summary
Udhayanidhi Stalin Released Nagapattinam 20 November 2020