சத்தமே இல்லாமல் கில்லாடி வேலை பார்த்த உதயநிதி.. கொண்டாட்டத்தில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்த கலைஞர் ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று உடல்நலக்குறைவால் இயற்கையை எய்தினார். இந்த தினத்தில் தி.மு.கவினர் காலையிலேயே முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பல நலத்திட்ட பணிகளையும் செய்து வந்தனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும், திரைத்துறை மூலமாக அறிமுகம் ஏற்படுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் அறிமுகம் செய்து, இளைஞரணியில் பதவியும் வழங்கப்பட்டது. உதயநிதியும் பல தி.மு.க கூட்டங்களில் கலந்துகொண்டு, உடன் பிறப்புகளிடையே உரையாற்றினார்.

இந்நிலையில், இன்று அவரது ட்விட்டர் பதிவில், " இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற உழைத்த முத்தமிழறிஞரின் வழியில்-அவரது நினைவு நாளான இன்று-சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தேன். கலைஞரால் கிடைத்த சென்னை நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிய 200 பெண்களுக்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சர்வதேச திமுக கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஸ்கில்டு ஜாப்ஸ் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் வேலூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் ஏ.பி.நந்தகுமார், திருச்சி தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin make job for 200 persons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->