ஈரோடு.! கடன் பிரச்சனையால் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை.!
Tyler commits suicide by hanging due to debt problem
ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனை காரணமாக பெயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மனிமலைப் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. மனைவி சங்கீதா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் செல்லமுத்து நேற்று இரவு திடீரென வீட்டை உள்புறமாக பூட்டி கொண்டு வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லமுத்து பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சென்னிமலை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tyler commits suicide by hanging due to debt problem