2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் புதுகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் நவீன் (17). அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் கணபதி (24). இவர்கள் இருவரும் புதுகுப்பத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் தர்மகுளம் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது நெய்தவாசல் சீரா வெட்டி அய்யனார் கோவில் அருகே சென்றபோது, சாவடிகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன், இவர்கள் இருவரும் சென்ற இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

மேலும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நவீன் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheelers accident in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->