தர்மபுரி: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - கூலி தொழிலாளி பலி
Twowheelers accident in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் தீத்தாரப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெரியசாமி (32). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் மாரண்டஅல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது காட்டு மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரே மற்றொருவர் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் பெரியசாமி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாலக்கோடு காவல்துறையினர், உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheelers accident in dharmapuri