இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதி விபத்து - ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கருவேலங்காடு தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கமல்(35). இவரும் புளியங்குளத்தை சேர்ந்த நண்பரான விஜய குமாரும்(21) சென்னையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மற்றொரு நண்பரான வாசுதேவனுடைய அண்ணன் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தனர். இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்டு நேற்று மாலை நண்பர்கள் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆனந்தபுரம் பகுதி அருகே, சென்ற போது எதிரே வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler minivan accident in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->