இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து - தொழிலாளி காயம்
Twowheeler government bus accident in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்.
தர்மபுரியில் இருந்து சிந்தல்பாடி வழியாக சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. புழுதிகரையை சேர்ந்த முனுசாமி என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார்.
இந்நிலையில் பேருந்து சிந்தல்பாடி அருகே சென்றபோது எதிரே பார்த்தசாரதி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பார்த்தசாரதி காயமடைந்துள்ளார். இதையடுத்து பார்த்திசாரதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இந்த விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் முனுசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மொரப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler government bus accident in dharmapuri