#காஞ்சிபுரம் || மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் காட்டுமயிலூர் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (20). இவர் ஒரகடம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வாரணாசியில் இருந்து ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரகடம் சாலை வளைவில் சென்றபோது பஸ் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோபாலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினரின் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler bus accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->