ராணிப்பேட்டை: இருசக்கர வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு
Twowheeler accident in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அப்துல்லாபுரம் பஜனை கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (50). இவர் நேற்று மாலை ஜம்புகுளம் கூட்ரோட்டில் இருந்து கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கேசவணங்குப்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவில் வந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் முனுசாமி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler accident in ranipet