#பொள்ளாச்சி || பள்ளி மாணவிக்களுக்கு பாலியல் தொல்லை, இரண்டு ஆசிரியர்கள் கைது..!
Two teachers arrested in POCSO
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெள்ளாச்சியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் சைல்ட் ஹெல்ப் லைனுக்கு அழைத்து அந்த பள்ளியில் பணியாற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலசந்திரனும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணனும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழன்ட்ய்ஹைகள் நலத்துறையினர் புகார் உண்மை என கண்டறிந்தனர். அதன்பின், அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two teachers arrested in POCSO