ஈரோடு.! விற்பனைக்காக போதைப் பொருள் கொண்டு சென்ற 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் விற்பனைக்காக போதைப்பொருள் கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வைத்திருந்த பையில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் போதைப் பொருள்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும், இவர்கள் வாணிப்புதூர் பகுதியை சேர்ந்த குருகோகுல், தங்கவேல் என்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்த 28 கிலோ போதை மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two persons arrested for selling drugs in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->