சென்னை : 25 வயது இளைஞருக்கு கொரோனா! தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
two more corona patient increased in tamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 42 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது ஆன இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதை அவர் உறுதிபடுத்தி உள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் சீரான உடல் நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானதாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவித்திருந்தார். அவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 42 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் இதுவரை நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
two more corona patient increased in tamilnadu