பேரன் எடுக்கும் வயதில், கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. தூக்கில் தொங்கிய மகன்கள்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் வெங்கடாச்சலம் - ஜெய தீபா. இவர்களுக்கு விக்னேஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். விக்னேஸ்வரன் (வயது 22) பி.காம் படித்து வருகிறார். 

லோகேஸ்வரன் (19 வயது) பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். வெங்கடாசலம் - தீபாவுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். அங்குள்ள சமுத்திரம் பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் வெங்கடாசலம் வசித்து வந்துள்ளார். 

தீபா அவரது தாயார் வீட்டில் வசித்து வந்த வந்துள்ளார், அங்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் தீபாவிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையே பழக்கம் காதலாக மாறியுள்ளது. 

இதனால் தீபா சண்முகத்திற்கு அதிகளவு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த முறையற்ற பழக்கமானது தீபாவின் பெற்றோர் மற்றும் தீபாவின் மகன்களுக்கு தெரியவந்து, தீபாவை கண்டித்துள்ளனர். இந்நிலையில், தீபா பணம் மற்றும் நகையை எடுத்து விட்டு சண்முகத்துடன் தலைமறைவாகியுள்ளார். 

இந்த விஷயத்தை அறிந்த விக்னேஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து போலீசுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில், தாயின் செயலால் ஏற்பட்ட அவமானத்தால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two men suicide in Pudukkottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->