சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றவர்களுக்கு நிகழ்ந்த பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி,டி,சி கோட்ரஸ் குடியிருப்பில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் ராஜேஷ் (வயது-35), ஏழுமலை (வயது-35) இருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அதிலிருந்து விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two killed in poison gas attack while cleaning sewer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->