தேனி : மாட்டு வண்டி மீது மோதிய இரு சக்கரவாகனம்.. பரிதாபமாக பலியான இளைஞர்கள்..! - Seithipunal
Seithipunal


இரு சக்கர வாகனம் மீது மாட்டு வண்டி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர்கள் பிரதீப் குமார் (27), பிரபாகரன் (   28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் போடி - மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வைக்கோல் ஏற்றிகொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மாட்டு வண்டியின் பின் பக்கம் மீது மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் பலத்தகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two killed in motorcycle accident In Theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->