கரூர்: குழந்தை திருமணம் – இரு மாப்பிள்ளைகளுக்கு காவல் நிலையத்தில் அறிவுரை விருந்து.! கைது.!!
Two grooms arrested Attend Child Marriage In Karur
இருவேறு சம்பவங்களில் குழந்தை திருமணம் செய்த மணமகன் உட்பட பெற்றோர்கள், உறவினர்கள் கரூரில் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகில் உள்ள நொச்சிபட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்யபட்டது. இதுபற்றி சமூக நலதுறையினருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் மாப்பிள்ளை தர்மராஜ், அவரது தந்தை துரைசாமி, தாய் அருக்காணி, சிறுமியின் தந்தை மாரியப்பன், தாய் ராஜாத்தி ஆகியோரை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று, தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த மெக்கானிக் மணிகண்டன் என்பர் கைது செய்யபட்டார். கடந்த மார்ச் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறையினர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மணிகண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். குழந்தை திருமணங்களை தடுக்க காவல்துறை பலமுயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே நாளில் இரு இளைஞர்கள் கைது செய்யபட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two grooms arrested Attend Child Marriage In Karur