ராணிபேட்டை : தாயுடன் கிணற்றில் குளிக்க சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


தாயுடன் குளிக்க சென்ற இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனேரி கிராமத்தை சேர்ந்தவர் முரளி.  இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரேகா தனது மகள்களை அழைத்துக் கொண்டு் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.

தாயுடன் சென்ற சிறுமிகள் இருவரும் கிணற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். கிணற்றில் இறங்கி தேடியதில் சிறுமிகள் கிடைக்கவில்லை.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பின் உடலை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two girls drown in well


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->