விருதுநகர் அருகே பரிதாபம்.! மின்சாரம் பாய்ந்து இரண்டு ஊழியர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(30). அவியூர் அருகே கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஒரு ராஜா (26). இவர்கள் இரண்டு பேரும் சூரம்பட்டியில் உள்ள மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த நிதி நாயுடு என்பவருக்கு சொந்தமான அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நேற்று இரும்பு ஏணியை எடுத்துச் சென்றனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மீன் கம்பியில் ஏணி உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மயங்கிக் கிடந்த இருவரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two employees died due to electric shock in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->