#அரியலூர் || 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
Twelfth standard student suicide by hanging in Ariyalur district
அரியலூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மனைவி வனிதா அரியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் அபினா. இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 397 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார்.
ஆனால் அபினா தேர்வில் மதிப்பெண் குறைவாக இருப்பதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று காலை பதினோரு மணி அளவில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twelfth standard student suicide by hanging in Ariyalur district