ஓட்டலில் அறை எடுத்து தங்கிய நபர்.! திறந்து பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்குவது போல நடித்து எல்இடி டிவியை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விழுப்புரத்தில் இருக்கும் 4 முனை சந்திப்பு அருகே கே.வி.ஆர் என்றும் தங்கும் விடுதி ஒன்று இருக்கின்றது. இங்கே கடந்த வெள்ளிக்கிழமை தினத்தில் கையில் காலிப் பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு சென்ற நபர் ஒருவர், போலி ஆதார் கார்டை காண்பித்து அறை எடுத்து தங்க சென்றுள்ளார். 

அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே அறையை பூட்டிவிட்டு வெளியேச் சென்ற அந்த நபர் பிறகு நீண்ட நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை. அதன் பின்னர் ஊழியர்கள் அந்த அறையை திறந்து பார்த்த பொழுது பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான 22 இன்ச் எல்.இ.டி டிவி திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த மர்ம நபர் கையில் கொண்டுவந்த காலி பெட்டிக்குள் டிவியை மறைத்து வைத்து எடுத்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tv snatching in villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->