மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும் - டிடிவி தினகரன்.!!
ttv dinakaran mourning in army man mathizhagan
பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த மதியழகன் என்பவர். காஷ்மீரில் உள்ள கிராமங்களையும், வீரர்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் சந்தெர்பானி எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன் தினம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சூட்டில் மதியழகன் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மதியழகன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை,சேலம் மாவட்டம் ஸ்ரீரங்காய் காடு கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.மதியழகன், காஷ்மீரில் பாகிஸ்தான் படையினருடன் நடந்த சண்டையில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
நாட்டுக்காக அவரை இழந்திருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.
English Summary
ttv dinakaran mourning in army man mathizhagan