மிகுந்த வேதனையுடன் டிடிவி தினகரன் வெளியிட்ட செய்தி.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்தவர் மருத்துவர் சாந்தா. 1955 ஆம் ஆண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கிய சாந்தா, கடந்த 67 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்தார். மேலும், 20 ஆண்டுகாலமாக மருத்துவமனையின் தலைவராகவும் உள்ளார். தன்னலமற்ற தனது சேவைக்காக பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் மருத்துவர் சாந்தா. 

இவர் இதய நோய் சம்பந்தமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவரது மறைவிற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மபூஷன் டாக்டர். வி.சாந்தா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர். பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவை ஆற்றிவந்த டாக்டர்.சாந்தா அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran mourning dr shanta


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->