ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுவிற்கு வழிவகை செய்யாதீர்கள்.. கோபத்தில் டிடிவி தினகரன்..!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகை செய்தியாளராக பணியாற்றி வரும் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கு குறைகள் குறித்து செய்திகளை சேகரித்து வெளியிட்டதாக தெரியவருகிறது. இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். 

கொரோனா  தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி  செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள  பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் " என்று தெரிவித்துள்ளர்..

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran angry about coimbatore press person arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->