10 ரூபாய் டாக்டரின் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் கோபால், ரூ.10 க்கு ஏழை, எளிய மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவர் தற்போது உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இயற்கையை எய்தினார். இவரின் மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இது தொடர்பாக பதிவு செய்துள்ள ட்விட்டில், " அரை நூற்றாண்டாக ஏழை, எளிய மக்களின் மருத்துவராக சேவை புரிந்துவந்த சென்னை வண்ணாரப்பேட்டை டாக்டர் கோபால் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 

மருத்துவம் பார்ப்பதை புனிதப் பணியாக கருதி தொண்டாற்றிவந்த அன்னாரது மறைவு மருத்துவ உலகத்திற்கு மட்டுமின்றி, எளிய மக்களுக்கும் பேரிழப்பாகும். மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் கோபால் அவர்களின் பெயர், மக்கள் மனங்களில் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Regret to Chennai Vannarpet 10 Rs Doctor Passed Away 9 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->