இராணுவ வீரர் பழனி வீரமரணம்... டிடிவி கண்ணீர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தில், இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மூவரில் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பழனி என்ற செய்தி வெளியாகி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் " சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன். 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கடுக்கலூர்  கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழனியின் தியாகத்திற்குத் தலை வணங்குவோம் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran regret about Army Officer Palani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->