" ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியல் " - டிடிவி தினகரன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதையை செலுத்தினார். முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அமமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், " தற்போது மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த காலங்களில் அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரசியல் செய்து வருகிறோம். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரிடம் நான் கொரோனவால் நமக்கும், பிறருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அன்போடு உத்தரவு பிறப்பித்து இருந்தேன். இதனால் கூட்டம் சேர்க்காமல் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுத்தினேன். எனது அறிவுரையை ஏற்ற கழகத்தினர் மக்களுக்கு பல உதவிகளை பாதுகாப்புடன் செய்துள்ளனர் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Pressmeet at Pasumpon 30 October 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->