சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்தால், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.. டிடிவி கொந்தளிப்பு.!
TTV Dhinakaran angry about Periyar Statue Disrespect in Trichy
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது.
அண்மையில் கோவையில் தந்தை பெரியாரின் சிலையை அவமதித்தவர்கள் மீதும், இந்து மதம் குறித்து தவறாக பேசியவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், மீண்டும் இது போன்று நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், " திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை காவி வண்ணம் பூசி அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் சிலைகளை இப்படி தொடர்ந்து அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
TTV Dhinakaran angry about Periyar Statue Disrespect in Trichy