ஆசிரியர் மாணவர்களை சர்ச்சையான வார்த்தைகளால் திட்டியதால்.! மாணவர்கள் அதிர்ச்சி.!! பெற்றோர்கள் முற்றுகை.!!
Tthe students are shocked as the teacher scolds them with controversial words.
கோவை சரவம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் பிரம்பால் அடித்ததாகவும் புகார்கள் வந்தன இதனால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அனைவரும் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர் இதுகுறித்து கூறும்போது ஆரம்ப பள்ளியில் தொடர்ந்து இந்த செயலை தலைமை ஆசிரியர் செய்துவருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனால் தான் தங்கள் பிள்ளைகளை சரவணம்பட்டியில் சேர்த்ததாக கூறினார்கள். மேலும் பெற்றோர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Tthe students are shocked as the teacher scolds them with controversial words.