தர்மபுரி: 2 லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம்.!
Truck accident in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் மேல் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த காசிராம்(30) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் லாரி நேற்று காலை தொப்பூர் கட்டமேடு பகுதியருகே வந்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவில் இருந்து ஈரோட்டுக்கு எள்ளு ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரி மீது காசிராம் ஓட்டிச் சென்ற லாரி மோதியது.
இந்த விபத்தில் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் காசிராம் பலத்த காயமடைந்துள்ளார். மேலும் எள்ளு ஏற்றி வந்த ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் காயமடைந்த காசிராமை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Truck accident in dharmapuri