சரக்கடிக்க பணம் கேட்டு தொந்தரவு.. கணவனை கல்லால் அடித்த மனைவி.. உயிர் பிரிந்த சோகம்.!!
Triupattur man murder by wife police arrest
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை கருப்பனூர் பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 30). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவரது மனைவி சுகந்தி (வயது 26). இவர்கள் இருவருக்கும் இறந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், வெங்கடேசன் பணிகளுக்கு சரிவர செல்லாமல், மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை சுகந்தி கண்டித்துள்ளார். மேலும், வெங்கடேசன் அடிக்கடி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதியன்று வெங்கடேசன் மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஏற்கனவே போதையில் இருந்த வெங்கடேசன் போதை களைப்பில் கீழே விழுந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் சுகந்தியிடம் தெரிவிக்கவே, மனிதாபிமானம் கொண்ட மனைவி கணவனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதில் வெங்கடேசன் தனது மனைவியை தாக்க முயற்சிக்கவே, இதனைத்தடுத்த மனைவி கணவன் எடுத்து வந்த கல்லை வைத்து வெங்கடேசனை தாக்கியுள்ளார். இதனால் தலை சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட வெங்கடேசன் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி மற்றும் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வெங்கடேசனின் தாயார் பருவதம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுகந்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Triupattur man murder by wife police arrest